Saturday, December 17, 2011

பெர்முடா முக்கோணம்.. ஓர் அதிசயம்

புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு, நிலாவில் நீர் கண்டுபிடிப்பு, இரட்டை சூரியன் கண்டுபிடிப்பு என தொடர்ந்து முத்திரை பதித்து வரும் நம் விஞ்ஞானிகள், நீண்ட காலமாக ஒரு விஷயத்தை பற்றிய ஆராய்ச்சியை கையில் எடுக்க பயப்படுகின்றனர். அது "பெர்முடா முக்கோணம்'. இதை சாத்தான் முக்கோணம் என்றும் அழைப்பார்கள்.
பெர்முடா முக்கோணம்:
வட அட்லாண்டிக் கடல் பகுதியில், பஹாமாஸ், புளோரிடா நீரிணைப்பு, கரீபியன் தீவுகள் மற்றும் அட்லாண்டிக்கின் கிழக்கு பகுதியிலிருந்து அசோரஸ் வரை
உள்ள பகுதிகளை இணைத்தால் முக்கோணம் போன்ற தோற்றம் கிடைக்கும். இது பெர்முடா முக்கோணம். ஆனால், மேலைநாட்டு எழுத்தாளர்கள் புளோரிடா கடற்கரை, சான் ஜூன், போர்ட்டோ ரிகா மற்றும் பெர்முடாவின் மத்திய அட்லாண்டிக் தீவு ஆகியவை இணைந்த பகுதியை பெர்முடா முக்கோணம் என்று அழைப்பார்கள். இந்த பகுதியில் செல்லும் கப்பல்கள், விமானங்கள், படகுகள் அனைத்தும் மாயமாய் மறைகின்றன என்ற மர்ம ங்கள் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பஹாமாஸ் மற்றும் புளோரிடா நீரிணைப்பின் தெற்கு பகுதியில் தான் விபத்துகள் நடந்ததாக கூறப்படுகிறது.
பயமுறுத்தும் சம்பவங்கள்:
1872 ஆம் ஆண்டு மேரி செலஸ்டி என்ற கப்பல் மர்மமான முறையில் மறைந்தது முதல் சம்பவமாக கருதப்படுகிறது. 1918ஆம் ஆண்டு, "யு.எஸ்.எஸ்., சைக்ளோப்ஸ்' என்ற கப்பல் 309 ஊழியர்களுடன் மறைந்தது. 1945ஆம் ஆண்டு பிளைட் 19 என்ற போர் விமானம் இந்த பகுதியில் பறக்கும் போது காணாமல் போனது. 1948ஆம் ஆண்டு டக்ளஸ் டிசி-3 என்ற பயணிகள் விமானம் மியாமி நோக்கி பறந்தது. ஆனால் செல்லும் வழியில் விமானத்தின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மாயமானது. இதில் பயணம் செய்த 32 பேரின் நிலைமை என்னவென்று இன்னும் தெரியவில்லை. அதே வருடம் அசோரஸிலிருந்து பெர்முடா சென்ற விமானமும், ஜமைக்காவிலிருந்து கிங்ஸ்டன் சென்ற பயணிகள் விமானமும் காணாமல் போனது. இதை போல் இன்னும் சில விமானங்களும் கப்பல்களும் இந்த பகுதியில் தொலைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மேற்கூறிய எந்த சம்பவத்திற்கும் போதிய ஆதாரமும், உறுதியான விளக்கங்களும் தரப்படவில்லை.
மறுக்கும் லேரி:
அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலகரான லாரன்ஸ் டேவிட் கூச் என்பவர், தான் எழுதிய "தி பெர்முடா டிரையாங்கிள் மிஸ்ட்ரி: சால்வ்டு' என்ற புத்தகத்தில், பெர்முடா முக்கோணம் தொடர்புடைய செய்திகள் அனைத்தும் கட்டுக்கதைகள், மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்த எழுத்தாளர்கள் கற்பனையாக எழுதியது என்றார். காணாமல் போனதாக கூறப்படும் கப்பல்கள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வெப்பமண்டல புயல்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இது போன்ற சம்பவம் நடப்பது இயல்பு. காணாமல் போனதாக கூறப்படும் கப்பல்களின் தகவல்களை பதிவு செய்யும் அதிகாரிகள், சில மாதம் கழித்து அந்த கப்பல் மீண்டு வந்துவிட்டால் அந்த தகவல்களை பதிவு செய்வதில்லை. என்று தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளார்.
ஜப்பானிலும் "பேய்கடல்' :
பூமியில் பெர்முடா முக்கோணத்தின் மறுமுனையில் ஜப்பான் நாட்டின் தென் கிழக்கு கடற்பகுதி உள்ளது. டோக்கியாவிலிருந்து 100 கி.மீ., தொலைவிலுள்ள மியாகி தீவில் இந்த பகுதி அமைந்துள்ளது. இதை சாத்தான் கடல் என்றும் டிராகன் முக்கோணம் என்றும் அழைப்பார்கள். காரணம் இந்த பகுதியை தாண்டி செல்லும் விமானங்கள் மற்றும் கப்பல்களும் மாயமாகின்றன. இது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட போது காந்த மாறுபாடு (மேக்னடிக் வேரியேஷன்) குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விபத்துகள் நடந்திருக்கும் என்றும் பெர்முடா முக்கோணப் பகுதியில் ஏற்படும் சம்பவங்களுக்கும் இது தான் காரணம் என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பெர்முடா முக்கோணமாக கருதப்படும் பகுதியில் அதிகமான கப்பல் போக்குவரத்து நடக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பா, கரீபியன் தீவுகளில் உள்ள துறைமுகங்களுக்கு தினமும் சரக்கு மற்றும் சொகுசு கப்பல்கள் சென்று கொண்டு தான் இருக்கின்றன. அதே போல், பயணிகள் மற்றம் வர்த்தக விமானங்கள் புளோரிடா தீவு பகுதிகளுக்கு இடையில் சென்று வருகின்றன. பெர்முடா முக்கோணம் தொடர்பான மர்மங்களும். கதைகளும் எழுத்தப்பட்டு வருகின்றன.

Thursday, May 5, 2011

உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்........ஷ்ஷ் அப்பா!! சம்மர் வந்தாச்சு...

ஒரு வழியாக கோடைகாலம் துவங்கி விட்டது. வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. கோடைக் காலத்தில் "இதைச் சாப்பிட்டால் குளிர்ச்சி கிடைக்கும்" "அதைச் சாப்பிட்டால் சூடு பிடிக்கும்' என்ற ஆலோசனைகள் நம்மைச் சுற்றும். ஆனால் வெப்பத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்வது அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. உங்களுக்காக இங்கு சில "நச் டிப்ஸ்'கள்...
* வெயிலில் திரிந்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் உடனடியாக ப்ரிட்ஜை திறந்து கடகடவென கூல் வாட்டர் குடிக்க நன்றாக இருக்கும். ஆனால், அது பெரும் தவறு . எனவே, கொஞ்சம் "ரிலாக்ஸ்' ஆகிவிட்டு தண்ணீர் பருகுங்கள். மேலும் பிரிட்ஜ் தண்ணீரால் ஜலதோஷம், தலைவலி உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம். அதைவிட, மண்பானையில் சேமித்து வைத்துக் குடிக்கலாம். இயல்பாகவே அந்த நீர் குளிர்ச்சி அடைவதால், கெடுதல் எதுவும் இருக்காது.
* குழந்தைகள், கோடையைக் கொண்டாடி விளையாடும்போது, அவர்கள் உடலிலிருந்து நீர்ச்சத்து அதிகம் வெளியேறும் (டிஹைட்ரேஷன்). தாகம் எடுத்தாலும், விளையாட்டு மூடில் அதை அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். எனவே, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அவர்களை தண்ணீர் குடிக்க வைப்பது அவசியம். குளுக்கோஸ் நீரை குழந்தைகளுக்கு கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
* தண்ணீரில் சீரகத்தைப் போட்டுக் கொதிக்க வைத்து, ஆற வைத்து, வடிகட்டிக் குடிக்கலாம். வெட்டிவேரைப் போட்டு வடிகட்டி குடிப்பதும் குளிர்ச்சி தரும்.
* இளநீர், மோர், பழச்சாறு அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம். பாட்டிலில் அடைக்கப்பட்டு வரும் பானங்களையும், ஐஸையும் தவிர்ப்பது நல்லது.
* எலுமிச்சைப் பழ ஜூஸ் மற்ற அனைத்தையும் விட சிறந்தது. ஒரு பழத்துக்கு அரை லிட்டர் நீர் விட்டு, உப்பு, ஏலக்காய், நாட்டுச் சர்க்கரை கலந்து ஜூஸ் தயாரித்து வைத்துக் கொண்டு, அவ்வப்போது பருகுங்கள்.
* கேரட், பீட்ரூட் போன்றவற்றையும் ஜூஸ் போடலாம். இவற்றிலும் நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் போடவும். தேங்காய்ப் பால் சேர்ப்பது சிறந்தது.
* அளவில் சிறியதாக இருந்தாலும் நெல்லிக்கனி வெயிலுக்கு உகந்தது. வைட்டமின்- "சி' அதிகமாக உள்ள இந்தக் கனி, வெயிலில் நாம் இழக்கும் எனர்ஜியைத் திரும்பத் தரவல்லது.
* ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, வாழை, திராட்சை, வெள்ளரி என பழக்கலவை (ஃப்ரூட் சாலட்) செய்து, காலை அல்லது இரவில் உண்ணலாம்.
* வெள்ளரிப்பழம், முலாம்பழம், தர்பூசணி போன்றவை நீர்ச்சத்து நிறைந்த, வெயிலுக்கு ஏற்ற பழங்கள். அதற்காகவேதான் வெயில் காலங்களில் இவை விளைகின்றன. உடலில் உள்ள நீர்த்தன்மையை சமநிலையில் வைத்துக் கொள்ள இந்தப் பழங்கள் உதவும்.
* மாம்பழம், பலாப்பழம் போன்றவை அதிகமாக கிடைக்கும். விலை குறைவாகக் கிடைக்கிறதே என்று அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் ஆபத்துதான். வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். எனவே, அளவாக சாப்பிடுவது முக்கியம் – குறிப்பாக, குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் <<உண்பதை தவிர்க்கவும்.
* மதிய நேரத்தில் கொஞ்சம் ஹெவியாக சாப்பிட்டாலும், இரவில் லைட்டாக சாப்பிடுவது வயிற்றுப் பிரச்னைகளில் இருந்து தள்ளி வைக்கும்.
* எண்ணெயில் பொரித்த வடை, பஜ்ஜி, சமோசா போன்ற அயிட்டங்களுக்கு தூரம் நிற்பது வயிறு, மனது, பர்ஸ் என அனைத்துக்கும் நல்லது.

Thursday, March 10, 2011

உலக கோடிஸ்வரர்கள் பட்டியல்!

உலக கோடிஸ்வரர்கள் பட்டியலில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த கார்லோஸ் ஸ்லிம், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, முதலிடத்தில் இடம் பெற்றுள்ளார். 9வது இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளார். பிரபல "போர்ப்ஸ்' பத்திரிகை உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் 10 இடங்களை பெற்றுள்ளவர்களின் பட்டியலை காண்போம்.
* கார்லோஸ் சிலிம் (மெக்சிகோ) - 74 பில்லியன் டாலர்கள்




* பில்கேட்ஸ் (அமெரிக்கா) - 56 பில்லியன் டாலர்கள்





* வாரென் பப்பெட் (அமெரிக்கா) - 50 பில்லியன் டாலர்கள்




* பெர்னார்டு அர்னால்டு (பிரான்ஸ்) - 41 பில்லியன் டாலர்கள்




* லார்ரி எல்லிசன் ( அமெரிக்கா) - 39.5 பில்லியன் டாலர்கள்




* லெட்சுமி மிட்டல் (இந்தியா) - 31.20 பில்லியன் டாலர்கள்




* அமென்சியோ ஆர்டிகா ( ஸ்பெயின்) - 31 பில்லியன் டாலர்கள்




* எய்க் படிஸ்டா (பிரேசில்) - 30 பில்லியன் டாலர்கள்





* முகேஷ் அம்பானி (இந்தியா) - 27 பில்லியன் டாலர்கள்




* கிறிஷ்டி வால்டன் (அமெரிக்கா) - 26.5 பில்லியன் டாலர்கள்

Friday, February 25, 2011

"ரோபோகாப்'பை போல் "ரோபோசெப்'

மனிதனின் அரிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் முக்கியமான ஒன்று ரோபோ. வேலை பளுவை குறை ப்பதற்காகவும், வேகமாக வேலையை முடித்துக் கொல்வதற்காகவும் கண்டு பிடிக்கப்பட்ட இந்த ரோபோக்களின் பயன்பாடு விஸ்தரித்துக் கொண்டே வருகிறது. ஷாங்காயில் இருக்கும் ஒரு உணவகத்தில் ரோ‌போக்‌கள் உணவு தயாரித்து பரிமாறுகின்றன. 3 நிமிடங்களில் அசாதரணமாக உணவை தயாரித்து வாடிக்கையாளர்கள் பரிமாறி அசத்தி பருகின்றன. இந்த ரோபோக்களின் விலை என்னவோ சற்று அதிகம் தான். ஒரு ரோ‌போ 30,350 டாலர் என்கிறது ஓட்டல் நிர்வாகம். 2010ம் ஆண்டு ஷாங்காய் சர்வதேச எக்ஸ்போவில் இந்த ரோபோக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.

எகிப்தில் பிறந்த குழந்தைக்கு பெயர் "பேஸ்புக்"


எகிப்தில், பிறந்த குழந்தைக்கு பேஸ்புக் பெய‌ரை சூட்டி அதற்கு பெருமை சேர்த்துள்ளனர் எகிப்து தம்பதியினர். எகிப்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, ஹோஸ்னி முபாரக், அதிபராக பதவி வகித்து வந்தார். இவரது ஆட்சியில் ஊழல்கள், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். நாட்டில் நிகழும் நிகழ்ச்சியை மற்றவர்கள் தெரிந்து கொள்வதை தடை செய்யும் பொருட்டு, எல்லா தொலை தொடர்பு சேவையையும் எகிப்து அரது தடை செய்தது. இந்நிலையில், பேஸ்புக் மட்டும் அந்த நாட்டு மக்களுக்கு பேருதவி செய்தது. இதனையடுத்து, 18 நாட்கள் கிளர்ச்சிக்குப் பிறகு, ஹோஸ்னி முபாரக்கின் கட்டுப்பாட்டிலிருந்து எகிப்து விடுதலை பெற்றது. இந்த மக்கள் வெற்றிக்கு பேஸ்புக் பெரும் பங்காற்றியது. இந்நிலையில், பேஸ்புக்கை கவுரவிக்கும் வகையில், எகிப்தில் பிறந்த குழந்தைக்கு பேஸ்புக் என்று எகிப்து தம்பதி பெயர் வைத்துள்ளனர்.

என் இதயம்..



























Thursday, January 27, 2011

என் உயிர் காதலி..

*அடைத்த கதவை
இழுத்து சரிபார்ப்பதுபோல்..
என்னிடம் செல்லமாக
சண்டையிட்டு
உறுதி செய்கிறாய் பூர்ணி
உன் மீதான என் காதலை...







*தாய் தந்தை எனக்கு இருந்தாலும்
பூர்வா..
நீ மட்டும் இல்லையென்றால்
நான் ஒரு அனாதை!

10 பில்லியன் டவுன்லோடுகள் கடந்து 'ஆப்பிள்' சாதனை

சர்வதேச அளவில் ஐ பாட் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஆப்பிள் நிறுவனம், தங்களது ஆப்பிள் ஆப் ஸ்டோரின் மூலம் 10 பி்ல்லியன் டவுன்லோடுகள் கடந்து சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2008ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன், இன்று சர்வதேச அளவில் சக்கைப்போடு போட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தங்களது ஆப் ஸ்டோர்களின் மூலம் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட புரோகிராம்களும், அதேபோல், 40 ஆயிரத்திற்கும் அதிகமான அப்ளிகேசன்களும் வழங்கப்பட்டு வருகிறது. 2010ம் ஆண்டு ஜூன் மாதத்தில், தங்களது ஆப் ஸ்டோர்களின் மூலம் நடந்த டவுன்லோடுகள் 10 பில்லியன் என்ற மைல்கல்லை தொட்டிருப்பது மகிழ்ச்சி‌யளிப்பதாக ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக, கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் மற்றும் நோக்கியாவின் ஓவி ஸ்டோர் களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டல் விருதை பெற்றார் ரஹ்மான்

உலக பொருளாதார அமைப்பின் சார்பில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு கிறிஸ்டல் விருது வழங்கப்பட்டது. இந்த அமைப்பின் 5 நாள் கூட்டம் சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் தொடங்கியது. இந்த கூட்டத்தில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலக பொருளாதார அமைப்பின் சார்பில் கிறிஸ்டல் விருது வழங்கப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசைத் துறையில் படைத்த சாதனைகளுக்காக மட்டுமின்றி அவரது சமூக சேவையைப் பாராட்டியும் இந்த விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரஷிய ஜனாதிபதி மெட்வதேவ் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த விருது குறித்து ரஹ்மான் கூறுகையில், "உலகின் மிக உயர்ந்த பெருமை இது. மகிழ்ச்சியாக உள்ளது. மனித நேயம்தான் உலகில் இன்றைக்கு மிக அவசிய தேவை. மனித நேயத்தை வளர்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன்," என்றார்.

Thursday, January 6, 2011

கனவு அணியில் கபில், சச்சின், சேவக்

ஐ.சி.சி., ஒரு நாள் போட்டிக்கான கனவு அணியில் இந்தியாவின் கபில் தேவ், சச்சின், சேவக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மெல்போர்னில் கடந்த 1971, ஜன. 5ம் தேதி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மோதிய முதலாவது ஒரு நாள் போட்டி நடந்தது. தற்போது ஒரு நாள் போட்டிகள் துவங்கியதன் 40 ஆண்டுகள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒரு நாள் அரங்கின் கனவு அணியை தேர்வு செய்ய, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) முடிவு செய்தது. இதற்காக முதலில் 48 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் இருந்து சிறந்த 11 வீரர்களை, ஐ.சி.சி., இணையதளம் மூலமாக ரசிகர்கள் தேர்வு செய்தனர். இதில், 97 நாடுகளை சேர்ந்த 6 லட்சத்துக்கும் அதிகமானோர் ஓட்டளித்தனர். நேற்று முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன்படி, 1983ல் இந்திய அணிக்கு உலக கோப்பை பெற்று தந்த கபில் தேவ் "ஆல்-ரவுண்டராக' இடம் பெற்றுள்ளார். துவக்க வீரர்களாக சச்சின், சேவக் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 48 பேர் பட்டியலில் இடம் பெற்றிருந்த இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் கும்ளே, ஹர்பஜன், தோனி, கங்குலி ஆகியோர் கனவு அணியில் வாய்ப்பு பெற இயலவில்லை.
கடந்த 2006ல் ஆஸ்திரேலியா(434), தென் ஆப்ரிக்கா(438/9), இடையே நடந்த பரப்பான மோதல், சிறந்த ஒரு நாள் போட்டியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒரு நாள் அரங்கின் ஐ.சி.சி., கனவு அணி:
துவக்க வீரர்கள்: சச்சின், சேவக்(இருவரும் இந்தியா)
மிடில் ஆர்டர்: வெஸ்ட் இண்டீசின் லாரா மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ், பாண்டிங்(ஆஸி.,)
ஆல்-ரவுண்டர்- கபில் தேவ்(இந்தியா)
விக்கெட் கீப்பர்- கில்கிறிஸ்ட்(ஆஸி.,)
சுழற்பந்துவீச்சாளர்: முரளிதரன்(இலங்கை)
வேகப்பந்துவீச்சாளர்கள்: அக்ரம்(பாக்.,), மெக்ராத்(ஆஸி.,)டொனால்டு(தென் ஆப்ரிக்கா).
12வது வீரர்: மைக்கெல் பெவன்(ஆஸி.,)